பைடனுக்கு செலுத்தப்பட்டது கொரோனா தடுப்பூசி

பைடனுக்கு செலுத்தப்பட்டது கொரோனா தடுப்பூசி

அமெரிக்க ஜனாதிபதியாக தெரிவான ஜோ பைடனுக்கு கொரோனா தடுப்புக்கான பைசர் மருந்தின் முதல் ஊசி செலுத்தப்பட்டது.

அமெரிக்காவில் கொரோனா தொற்று எண்ணிக்கையும், உயிரிழப்பும் அதிக அளவில் உள்ளன. பிற நாடுகளை பின்னுக்கு தள்ளி விட்டு முதல் இடம் பிடித்துள்ளது அந்த நாடு. இந்நிலையில், கொரோனா தடுப்புக்கான பைசர் மருந்து கண்டறியப்பட்டது அந்நாட்டு மக்களுக்கு ஆறுதலை ஏற்படுத்தியது.

அண்மையில் நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் ஜோ பைடன் அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அடுத்த ஆண்டு ஜனவரியில் அவர் பதவி ஏற்க உள்ளார்.

இந்த நிலையில், அமெரிக்காவின் டெலாவேர் மாகாணத்தில் நியூவார்க் நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் ஜோ பைடனுக்கு கொரோனா தடுப்புக்கான பைசர் மருந்தின் முதல் ஊசி உட்செலுத்தப்பட்டது.

இதனை எடுத்துக் கொண்ட பின், மருந்து கிடைக்கும்பொழுது அதனை எடுத்துக் கொள்ளுங்கள் என தனது நாட்டு மக்களை அவர் வலியுறுத்தியுள்ளார்.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *