முஸ்லிம்களுக்கு எதிராக களமிறங்கியுள்ள ஞானசாரதேரர்

முஸ்லிம்களுக்கு எதிராக களமிறங்கியுள்ள ஞானசாரதேரர்

பல்வேறு அடிப்படைவாத இஸ்லாமிய அமைப்புகள் இலங்கையில் செயற்பட்டு முஸ்லிம் மக்களை திசைதிருப்புகின்றன.

இவ்வாறு மக்களை திசை திருப்பும் நடவடிக்கைக்கு அரச அதிகாரிகளும் அரச ஊடகங்களும் துணைபுரிகின்றன.

எனவே இலங்கை ஒளிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் ஒருபிரிவாக செயற்பட்டு வரும் முஸ்லிம் தேசிய ஒளிபரப்பினை தடைசெய்யக்கோரி பொதுபல சேனா அமைப்பு, ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவிடம் நேற்று திங்கட்கிழமை கோரிக்கை விடுத்துள்ளது.

அந்த அமைப்பைச் சேர்ந்த பொதுச் செயலாளரான கலகொட அத்தே ஞானசார தேரர், கொழும்பிலுள்ள ஊடக அமைச்சில் இந்த முறைப்பாட்டை வழங்கியுள்ளார்.

அதன்பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், வஹாப்வாத, இக்குவான் இனவாதப் பிரிவு என பல்வேறு அடிப்படைவாத இஸ்லாமிய அமைப்புக்கள் இலங்கையில் செயற்பட்டு முஸ்லிம் மக்களை திசைதிருப்புவதாக நாங்கள் அடிக்கடி கூறிவந்தோம்.

ஆனாலும் அதனை பலரும் ஈஸ்டர் தாக்குதல் இடம்பெறும் வரை நம்பவில்லை. ஆனால் இன்று அந்த செயற்பாடுகள் அரச ஊடகங்களைப் பயன்படுத்தி இடம்பெறுகின்றன. அதனை அரசாங்கம் விரைந்து தடுக்க வேண்டும்.

அரசிலுள்ள சில அதிகாரிகள் முஸ்லிம் பிரிவுகளிலிருந்து பணம் உட்பட பல்வேறு இலஞ்சங்களைப் பெறுவதால் இதனை தடைசெய்ய முடியவில்லை. இனியும் அவ்வாறு இருக்கக்கூடாது. விரைந்து இந்த முஸ்லிம் ஒளிபரப்பினை தடைசெய்ய வேண்டும் என்று கூறினார்.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *