பிரான்ஸில் அதிர்ச்சிகர சம்பவம் – மூன்று பொலிஸார் சுட்டுக் கொலை

பிரான்ஸில் அதிர்ச்சிகர சம்பவம் – மூன்று பொலிஸார் சுட்டுக் கொலை

பிரான்ஸில் 3 பொலிஸார் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது

மத்திய பிரான்ஸின் செயின்ட்ஜஸ்ட் அருகே, ஒரு கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் சண்டை நடப்பதாகவும், உள்ளே இருந்து கூக்குரல் கேட்பதாகவும் இன்று அதிகாலையில் காவல்துறைக்கு தகவல் கிடைத்தது.

இதனையடுத்து அங்கு சென்ற பொலிசார் சண்டை நடந்த வீட்டை சுற்றி வளைத்தனர். அப்போது ஒரு பெண் அந்த வீட்டின் கூரை மீது நின்று தன்னை காப்பாற்றும்படி கதறி உள்ளார்.

அவரை பொலிசார் காப்பாற்ற முயன்றனர். அப்போது அந்த வீட்டில் இருந்த சுமார் 48 வயது மதிக்கத்தக்க நபர், திடீரென பொலிசாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். இதில் 3 பொலிஸார் உயிரிழந்தனர். ஒருவர் காயமடைந்தார். அத்துடன் அந்த நபர், தனது வீட்டிற்கும் தீ வைத்தார். வீட்டின் கூரையில் நின்றிருந்த பெண்ணை பொலிசார் மீட்டனர்.

தாக்குதல் நடத்திய நபர், சிறிது நேரத்தில் அவரது காருக்குள் இறந்து கிடந்தார். அவர் தற்கொலை செய்திருக்கலாம் என கூறப்படுகிறது. குடும்ப சண்டையை தடுக்கச் சென்ற பொலிஸார் கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பொதுமக்களை காப்பாற்றும் முயற்சியில் உயிர்த்தியாகம் செய்த பொலிஸாரின் குடும்பத்தினருக்கு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *