கனடா செல்ல முயன்ற யாழ்ப்பாண இளைஞர் கொழும்பு விமானநிலையத்தில் கைது

கனடா செல்ல முயன்ற யாழ்ப்பாண இளைஞர் கொழும்பு விமானநிலையத்தில் கைது

போலி கடவுச்சீட்டை பயன்படுத்தி கனடா செல்ல முயன்ற யாழ்ப்பாண இளைஞர் ஒருவர் கொழும்பு சர்வதேச விமானநிலையத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
பண்டாரநாயக்க விமானநிலையத்தை சேர்ந்த குடிவரவு குடியகல்வு பிரிவை சேர்ந்த அதிகாரிகள் போலி கடவுச்சீட்டை பயன்படுத்தி கனடா செல்ல முயன்ற அந்த இளைஞரை கைதுசெய்துள்ளனர்.
துபாய் மூலம் கனடா செல்ல முயன்ற யாழ்ப்பாணத்தை சேர்ந்த 22 இளைஞரே கைதுசெய்யப்பட்டுள்ளார்.

குறிப்பிட்ட இளைஞன் சமர்ப்பித்த கடவுச்சீட்டு குறித்து சந்தேகம் எழுந்ததை தொடர்ந்து விமானநிலைய அதிகாரிகள் விமானநிலையத்தில் உள்ள குடிவரவு குடியகல்வு பிரிவின் எல்லை கண்காணிப்பு பிரிவிற்கு அந்த கடவுச்சீட்டை அனுப்பியுள்ளனர்.
குறிப்பிட்ட கடவுச்சீட்டை ஆராய்ந்தவேளை அந்த கனடா கடவுச்சீட்டு வேறு ஓருவடையது என்பதும் மோசடி செய்யப்பட்டுள்ளது என்பதும் தெரியவந்தள்ளது. இதனை தொடர்ந்து யாழ்ப்பாணத்தை சேர்ந்த அந்த இளைஞனை கைதுசெய்த குடிவரவு குடியகல்வு துறை அதிகாரிகள் விசாரணைகளிற்காக சிஐடியினரிடம் ஒப்படைத்துள்ளனர்.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *