இந்தியா – அவுஸ்திரேலியா இடையேயான பொக்சிங் டே 2-வது டெஸ்ட் போட்டி இன்று!

இந்தியா – அவுஸ்திரேலியா இடையேயான பொக்சிங் டே 2-வது டெஸ்ட் போட்டி இன்று!

இந்தியாவுக்கு எதிரான பாக்சிங் டே டெஸ்ட் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்திரேலியா அணி முதலில் துடுப்பாட்டத்தைத் தெரிவு செய்துள்ளது.

விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி அவுஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை அவுஸ்திரேலியா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்திய அணி 20 ஓவர் கிரிக்கெட் தொடரை 2-1 என்ற கணக்கில் வென்றது.

அடுத்து இரு அணிகள் இடையே 4 டெஸ்ட் கொண்ட தொடர் நடைபெறுகிறது. அடிலெய்டில் நடந்த முதலாவது பகல்-இரவு டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.
இந்நிலையில், இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி உலகின் மிகப்பெரிய மைதானங்களில் ஒன்றான மெல்போர்னில் இன்று தொடங்கியது.

இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய  அணி முதலில் துடுப்பாட்டத்தைத் தெரிவு செய்து விளையாடி வருகிறது.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *