மனித உரிமை பேரவையில் எழக்கூடிய எந்த சவாலையும் எதிர்கொள்வோம் -அமைச்சர் சரத்வீரசேகர

மனித உரிமை பேரவையில் எழக்கூடிய எந்த சவாலையும் எதிர்கொள்வோம் -அமைச்சர் சரத்வீரசேகர

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் எழக்கூடிய எந்த சவாலையும் எதிர்கொள்வதற்கு அரசாஙகம் தயார் என அமைச்சர் சரத்வீரசேகர தெரிவித்துள்ளார்.ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையில் முன்வைக்கப்படும் எந்த குற்றச்சாட்டையும் எதிர்கொள்வதற்கான திறமை அரசாங்கத்திற்குள்ளது என அமைச்சர் தெரிவித்துள்ளார்.எதிர்வரும் அமர்வில் இலங்கைக்கு ஆதரவளிப்பதாக பல நாடுகள் ஏற்கனவே உறுதியளித்;துள்ளன என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் படையினர் எந்த போர்க்குற்றங்களிலும் ஈடுபடவில்லை என தெரிவித்துள்ள அமைச்சர் விடுதலைப்புலிகளின் பிடியில் சிக்குண்டிருந்த மக்களை காப்பாற்றுவதற்கான பாரிய மனிதாபிமான நடவடிக்கைகளிலேயே படையினர் ஈடுபட்டனர் என்பதற்கான முழுமையான ஆதாரங்களை சமர்ப்பிப்பதற்கு அரசாங்கம் தயாராகவுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

காணாமல்போனவர்கள் குறித்த கற்றுக்கொண்ட பாடங்கள் ஆணைக்குழுவினதும் பரணகம ஆணைக்குழுவினதும அறிக்கையை சமர்ப்பிப்பதற்கு அரசாங்கம் மேற்கொண்ட முயற்சிகளை தருஸ்மன் குழுவினரும் முன்னாள் ஐநாவின் மனித உரிமை ஆணையாளர் அல் ஹ_சைனும் தடுத்துநிறுத்தவிட்டனர் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மனித உரிமை பேரவையின் எதிர்வரும் அமர்வில் அரசாங்கம் இந்த அறிக்கைகளை சமர்ப்பிக்க திட்டமிட்டுள்ளது என குறிப்பிட்டுள்ள அமைச்சர் எதிர்வரும் அமர்வில் இலங்கைக்கு ஆதரவளிப்பதாக சீனா ரஸ்யா பாக்கிஸ்தான் கியுபா தெரிவித்துள்ளன எனவும் குறிப்பிட்டுள்ளார்

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *