ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருந்த உவத்தேன்ன சுமன தேரருக்கு வழங்கப்பட்ட மன்னிப்பு

ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருந்த உவத்தேன்ன சுமன தேரருக்கு வழங்கப்பட்ட மன்னிப்பு

ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருந்த உவத்தேன்ன சுமன தேரருக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தண்டனைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டை அவர் திரும்பப் பெறவேண்டும் என்ற நிபந்தனைக்கு கீழ் இந்த மன்னிப்பு வழங்கப்படுகிறது.

கடந்த 2010இல் அப்போதைய ஜனாதிபதி வேட்பாளர் முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவின் ஆதரவாளராக இருந்த சுமன தேரர் ரி 56 துப்பாக்கியை வைத்திருந்தமைக்காக தண்டனை விதிக்கப்பட்டது.

இதேவேளை, 50 கையெறி குண்டுகள் மற்றும் 210 சுற்று வெடிமருந்துகளை வைத்திருந்ததாகவும் அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது, எனினும் பின்னர் அந்த குற்றச்சாட்டுகள் திரும்பப்பெறப்பட்டன.

கைதுசெய்யப்படும் போது இவர், கொழும்பின் மாளிகாவத்தையில் உள்ள ஸ்ரீ போதிராஜராம விகாரையின் தலைமை துறவியாக இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *