தற்கொலைத் தாக்குதலால் அதிர்ந்த சோமாலியா! மூவர் உடல் சிதறிப் பலி – தொடரும் சோகம்

தற்கொலைத் தாக்குதலால் அதிர்ந்த சோமாலியா! மூவர் உடல் சிதறிப் பலி – தொடரும் சோகம்

சோமாலியாவில் துருக்கி நாட்டினரை குறிவைத்து நடத்தப்பட்ட தற்கொலைப்படைத் தாக்குதலில் 3 பேர் பலியாகியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

சோமாலியாவில் அல்கொய்தா பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய அல் ‌‌ஷபாப் பயங்கரவாதிகள் கடும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.

இவர்கள் அங்கு பொலிஸார் மற்றும் இராணுவ வீரர்களை குறிவைத்தும் வெளிநாட்டினரை குறிவைத்தும் பயங்கரவாத தாக்குதல்களை அரங்கேற்றி வருகின்றனர்.

இந்நிலையில் சோமாலியாவின் தலைநகர் மொகாதிசுவில் வீதி அமைக்கும் பணியில் துருக்கியைச் சேர்ந்த கட்டுமான நிறுவனம் ஈடுபட்டுள்ளது. அங்கு துருக்கி பொறியியலாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் ஏராளமானோர் பணியாற்றி வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்றுக் காலை மொகாதிசுவில் துருக்கி பொறியியலாளர்களை குறிவைத்து அல் ‌‌ஷபாப் பயங்கரவாதிகள் தற்கொலைபடை தாக்குதலை நிகழ்த்தினர்.

வீதி அமைக்கும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்த இடத்தில் தற்கொலைப்படை பயங்கரவாதி ஒருவர் உடலில் வெடிகுண்டுகளை கட்டிக்கொண்டு வந்து வெடிக்கச் செய்தார்.

இந்த குண்டுவெடிப்பில் துருக்கி அதிகாரி ஒருவரும் சோமாலியா பொலிஸ் அதிகாரிகள் 2 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்தனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *