உயிரிழந்தவர்களின் உடல்கள் குறித்து ஆராய்வதற்காக எந்த குழுவையும் நியமிக்கவில்லை- சுதர்சினி

உயிரிழந்தவர்களின் உடல்கள் குறித்து ஆராய்வதற்காக எந்த குழுவையும் நியமிக்கவில்லை- சுதர்சினி

கொரோனா வைரசினால் உயிரிழந்தவர்களின் உடல்கள் குறித்து ஆராய்வதற்காக எந்த குழுவையும் நியமிக்கவில்லை என இராஜாங்க அமைச்சர் சுதர்சினி பெர்ணாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரசினால் உயிரிழந்தவர்களின் உடல்களை தகனம் செய்வதா அடக்கம் செய்வதா என்பதை ஆராய்வதற்கான தான் குழுவொன்றை நியமித்துள்ளதாக ஊடகங்களிலும் சமூக ஊடங்களிலும் தகவல்கள் வெளியாகியுள்ளன என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.கொவிட்டினை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் எப்போதும் விஞ்ஞானரீதியிலானவையாக காணப்படவேண்டும்,மத இன அரசியல் சமூக மற்றும் புராணஅடிப்படையில் இதற்கு தீர்வை காணதுமுடியாது என அவர் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் புதிய நோய் என்பதால் உலக சுகாதார ஸ்தாபனத்தின் ஆரம்ப கட்ட பரிந்துரைகள் மாற்றமடையலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *