முள்ளிவாய்கால் நினைவேந்தல் தூபி இடிக்கப்பட்ட சம்பவத்துக்கும் தமக்கும் எந்தவித தொடர்பும் இல்லை -இராணுவத் தளபதி

முள்ளிவாய்கால் நினைவேந்தல் தூபி இடிக்கப்பட்ட சம்பவத்துக்கும் தமக்கும் எந்தவித தொடர்பும் இல்லை -இராணுவத் தளபதி

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்கால் நினைவேந்தல் தூபி இடிக்கப்பட்ட சம்பவத்துக்கும் தமக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.

கொழும்பு ஊடகமொன்றுக்கு இது தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு அவர் தெரிவித்தார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

யாழ். பல்கலைக்கழகத்தின் நினைவிடம் இடிக்கப்பட்டமையானது, பல்கலைக்கழக நிர்வாகத்தின் தீர்மானம் என கூறிய அவர், அந்த விடயத்திற்கும் தமக்கும் அணுவளவேனும் தொடர்பு கிடையாது.

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இராணுவம் இந்த விடயத்தில் தலையிடப் போவதில்லை.

பல்கலைக்கழகத்திற்குள் அமைதியின்மை ஏற்பட்டு, பொலிஸாரினால் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முடியாத பட்சத்தில் மாத்திரமே, தம்மால் அந்த விவகாரத்தில் தலையிட முடியும் என கூறிய அவர், அதுவரை தம்மால் பல்கலைக்கழக விவகாரத்தில் தொடர்புபட முடியாது என மேலும் தெரிவித்தார்.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *