பஸ் சாரதி 18 கிலோ ஐஸ் போதைப்பொருளுடன் கைது

பஸ் சாரதி 18 கிலோ ஐஸ் போதைப்பொருளுடன் கைது

கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் 18 கிலோ கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் 27 வயது சந்தேக நபர் ஒருவரைக் கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோகண தெரிவித்தார்.

காலியிலிருந்து கொழும்பு செல்லும் பேருந்தில் போதைப்பொருள் விநியோகிக்கப்பட்டதாக நிரூபிக்கப்பட்டதால் குறித்த நபர் கொஸ்கொடவில் வைத்துக்  கைது செய்யப்பட்டார்.

சந்தேக நபர் பொலிஸ் காவலிலுள்ள அங்கொட லொக்காவுடன் தொடர்பிலுள்ளவர் என்பதும் வெளிப்படுத்தப்பட்டது.

சந்தேக நபர் தற்போது பொலிஸ் காவலில் வைக்கப்பட்டு விசாரணைக்காக காத்திருப்பதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார்.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *