104 இலங்கையர்கள் கட்டு நாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்

104 இலங்கையர்கள் கட்டு நாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்

கொவிட்-19 கொரோனா தொற்று காரணமாக வெளிநாடு களில் சிக்கியுள்ள 104 இலங்கையர்கள் கட்டு நாயக்க விமான நிலையத்தை இன்று வந்தடைந்தனர்.

அதன்படி, சவூதி அரேபியாவிலிருந்து 75 பேர், கட்டாரி லிருந்து 29 பேர் கட்டு நாயக்க விமான நிலையத்தை இன்று காலை வந்தடைந்ததாக கொவிட்-19 தடுப்பிற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

இவ்வாறு நாட்டை வந்தடைந்த அனைவருக்கும் பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு பின்னர் அனைவரும் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்காக அனுப்பப் பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.

இதனைத் தவிர மேலும் 325க்கும் மேற்பட்டோர் இன்றைய தினம் நாட்டுக்கு வருகை தரவுள்ளனர்.

அதன்படி, குவைத்திருந்து 297 பேர், சீனாவிலிருந்து 12 பேர், மாலைத்தீவு, பாகிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து இன் றைய தினம் வருகை தரவுள்ளனர்.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *