பிரபாகரனை கொன்று இழுத்துவந்ததாக தெரிவித்த ஜனாதிபதி

பிரபாகரனை கொன்று இழுத்துவந்ததாக தெரிவித்த ஜனாதிபதி

இறுதிக்கட்ட யுத்தத்தின் முடிவில் விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை கொன்று இழுத்துவந்ததாக தெரிவித்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மீது சர்வதேச விசாரணை நடத்தப்படவேண்டுமென தமிழ் தேசிய கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

இன்றையதினம் நாடாளுமன்றில் உரையாற்றிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் மேற்கண்ட கோரிக்கையை விடுத்தார்.இது தொடர்பில் அவர் தனதுரையில் மேலும் தெரிவிக்கையில்,அண்மையில் அம்பாறையில் நடந்த நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி, விடுதலைப் புலிகளின் தலைவரான வேலுப்பிள்ளை பிரபாகரனை கொன்று இழுத்துவந்ததாக தெரிவித்தார். அதனை அடிப்படையாக வைத்து போர்க் குற்ற விசாரணைகளை நடத்தும்படி அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகளிடம் கோரிக்கை விடுக்கின்றேன் என்றார்.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *