பிரேமச்சந்திரன் அரசியல் விபச்சாரி -கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

பிரேமச்சந்திரன் அரசியல் விபச்சாரி -கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

ஈபீஆர்எல்எப் அமைப்பின் தலைவரும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் இணைப் பேச்சாளருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் அரசியல் விபச்சாரி என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் அமைந்துள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது ஊடகவியலாளர்களால் எழுப்பிய கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கையிலையே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அதாவது கடந்த சில தினங்களுக்கு முன்னர் இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றின் போது ஐ.நாவிற்காக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் வரைபில் இனப்படுகொலை என்ற வசனத்தை உள்ளடக்கவில்லை என்றும் சர்வஐன வாக்கெடுப்பை கஜேந்திரகுமார் விரும்பவில்லை என்பது உட்பட பல்வெறு குற்றச்சாட்டுக்களை சுரேஸ்பிரேமச்சந்திரன் முன்வைத்திருந்தார்.

இந்த நிலையில் இன்று கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நடாத்திய ஊடக சந்திப்பின் போது சுரேஸ்பிரேமச்சந்திரனின் மேற்படி குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் கேள்வி எழுப்பிய போது அக் குற்றச்சாட்டக்களை நிராகரித்தார்.

மேலும் சுரேஸ் பிரேமச்சந்திரன் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களையும் சுமத்தியிருந்தார்.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *