யாழ். உரும்பிராயில் விபத்து- இளைஞர் பலி

யாழ். உரும்பிராயில் விபத்து- இளைஞர் பலி

யாழ். உரும்பிராய் பகுதியில் நேற்று இடம்பெற்ற விபத்தில் ஹயஸ் வேனில் மோதுண்டு இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

தன்னுடைய சகோதரனுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்தபோது விபத்து ஏற்படப்போவதை அவதானித்த இளைஞன் தப்பிக்க முயன்று பாய்ந்ததாகவும் வீதியில் அவர் வீழ்ந்தபோது அருகே வந்த வாகனம் அவர் மீது மோதியதாலேயே அவர் உயிரிழந்ததாகவும் தெரியவருகிறது.

இச்சம்பவத்தில் 25 வயதான மயூரன் என்பவரே பலியாகியுள்ளார்.

இதேவேளை ஓட்டுனரான சகோதரனும் விபத்தினால் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த இளைஞன் அரியாலை பார்வதி வித்தியாலய விளையாட்டுப் பயிற்றுவிப்பாளராகக் கடமையாற்றி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *