பயங்கரவாதிகளுக்கு அரசாங்கம் பாதுகாப்பு வழங்கியுள்ளது -சரத் பொன்சேகா

பயங்கரவாதிகளுக்கு அரசாங்கம் பாதுகாப்பு வழங்கியுள்ளது -சரத் பொன்சேகா

பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபட்ட பிள்ளையானுக்கு இராணுவ பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதை அவதானிக்கும் போது, தனக்கு வெட்கமாக உள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

சுமந்திரனுக்கான விசேட அதிரடிப்படையின் பாதுகாப்பு நீக்கப்பட்டதாக அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தமை தொடர்பாக இன்றையதினம் நாடாளுமன்றில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.தனதுரையில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறியமைக்காக, ஒருவருக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பை இரத்து செய்ய முடியாது.

அதேபோன்று, கருணா மற்றும் பிள்ளையான் ஆகியோரும், பாதுகாப்பு படையினரை கொலை செய்ததாக சரத் பொன்சேகா தெரிவித்தார்.

பயங்கரவாதிகளை நினைவு கூர்ந்தமைக்காக பாதுகாப்பு அப்புறப்படுத்தப்பட்டதாக சரத் வீரசேகர தெரிவித்த கருத்தை சுட்டிக்காட்டிய அவர், பாதுகாப்பு பிரிவினரை கொலை செய்த பயங்கரவாதிகளுக்கு அரசாங்கம் பாதுகாப்பு வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஒரு விடயத்தை மாத்திரம் கருத்திற் கொண்டு சுமந்திரனின் பாதுகாப்பை இல்லாது செய்ததை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *