உயிர்த்த ஞாயிறு தாக்குதலிற்கு நீதி கோருவதற்காக சர்வதேச நீதிமன்றத்தை நாடவேண்டியிருக்கும் – மல்கம் ரஞ்சித்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலிற்கு நீதி கோருவதற்காக சர்வதேச நீதிமன்றத்தை நாடவேண்டியிருக்கும் – மல்கம் ரஞ்சித்

ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையின் பிரதி இதுவரை கிடைக்கவில்லை என பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்குப் பொ றுப்புக் கூற வேண்டியவர்களுக்கு எதிராக இலங்கையில் சட்டம் உரிய முறையில் செயற்படுத்தப்படவில்லை என்றால் சர்வதேச நீதிமன்றத்திற்குச் செல்லவுள்ளதாக  கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையின் பிரதியை ஜனாதிபதியிடம் கேட்டதாகவும், ஆனால் இதுவரை அது கிடைக்கவில்லை என்றும் இன்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *