பல்கலை மாணவர்களால் ஆரம்பிக்கப்பட்ட உணவு தவிர்ப்பு போராட்டம் 2ஆவது நாளாகவும்!

பல்கலை மாணவர்களால் ஆரம்பிக்கப்பட்ட உணவு தவிர்ப்பு போராட்டம் 2ஆவது நாளாகவும்!

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த வேண்டும், உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்து யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுவரும் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டம் இன்று இரண்டாவது நாளாகவும் தொடர்கின்றது.

நல்லூர் – நல்லை ஆதீனம் முன்பாக, யாழ்ப்பாணம் மற்றும் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களால் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த போராட்டத்தில் பலரும் கலந்துகொண்டு தமது ஆதரவினை தெரிவிக்கும் விதமாக இணைந்து கொண்டுள்ளனர்.

இந்த போராட்டத்தின் போது முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகளாவன,

ஸ்ரீலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்துவதினூடாக ஸ்ரீலங்கா அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டுள்ள போர்க் குற்றங்கள் மனித நேயத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் தமிழ் இனத்திற்கு எதிராக இனவழிப்பு என்பவற்றிக்கு சர்வதேச நீதி வேண்டும்.

தமிழ் இனத்தின் மீதான இனவழிப்பு தொடராது இருப்பதற்கு தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளான மரபுவழித் தாயகம், சுயநிர்ணய உரிமை, தமிழ்த் தேசியம் என்பன அங்கிகரிக்கப்பட வேண்டும்.

ஆகிய கோரிக்கைகளை முன்வைத்தே சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *