இன மற்றும் மத முரண்பாட்டை தூண்டுவதனை தடுப்பதற்கு சட்டம் தேவை -கோட்டாபய ராஜபக்‌ஷ

இன மற்றும் மத முரண்பாட்டை தூண்டுவதனை தடுப்பதற்கு சட்டம் தேவை -கோட்டாபய ராஜபக்‌ஷ

தமிழ் அடிப்படைவாத, பிரிவினைவாத பயங்கரவாதமும் இஸ்லாம் மதவாத அடிப்படைவாதமும் தலைதூக்க தமது அரசாங்கம் இடமளிக்காது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தெரிவித்தார்.

கிராமத்துடன் கலந்துரையாடல் வேலைத்திட்டத்தின் மற்றொரு கட்டம் குருணாகல் – கிரிபாவ வேரகலவில் நேற்று (06) நடைபெற்றது.

அங்கு உரையாற்றிய போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்,

ஏப்ரல் 21 தாக்குதலுக்கு அப்போது ஆட்சியில் இருந்த அரசாங்கமும், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுமே பொறுப்புக்கூற வேண்டும்.

பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படாததால், அவ்வாறான நிலை ஏற்பட்டமை ஆணைக்குழுவின் அறிக்கையில் தௌிவாகிறது.

இலங்கையில் நூற்றுக்கும் மேற்பட்ட ஐ.எஸ் ஆதரவாளர்கள் இருப்பதுடன், ஐ.எஸ் தெற்காசியாவில் காட்டுத் தீ போல் பரவி வருகின்றனர்.

இன மற்றும் மத முரண்பாட்டை தூண்டுவதனை தடுப்பதற்கு சட்ட வரையறை தயாரிக்கப்பட வேண்டியதன் தேவை இன்று உணரப்பட்டுள்ளது.

எனினும் துரதிர்ஷ்டவசமாக முன்னாள் பிரதமர் விக்ரமசிங்க உள்ளிட்ட அரசாங்கம் அதனை செய்யத் தவறிவிட்டது என்றார்.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *