புர்கா நிகாப்பினை தடை செய்வது  தேசிய பாதுகாப்பிற்கு அவசியம்

புர்கா நிகாப்பினை தடை செய்வது தேசிய பாதுகாப்பிற்கு அவசியம்

இலங்கையில் புர்கா நிகாப்பினை தடை செய்வது குறித்து எந்த தீர்மானத்தினையும் அரசாங்கம் எடுக்கவில்லை என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இது குறித்து வெளிவிவகார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளதாவது

இலங்கையில் புர்கா நிகாப்பினை தடை செய்வதற்கான யோசனைகள் குறித்து சமீபத்தில் ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டிருந்தன.இலங்கைஅரசாங்கம் அவ்வாறு தடைகளை விதிப்பது குறித்து எந்த தீர்மானத்தையும் எடுக்கவில்லை என வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஜயனத்கொலம்பகே தெரிவித்துள்ளார்.

அது வெறுமனே யோசனை மாத்திரமேதொடர்ந்தும்இது குறித்த கலந்துரையாடல்கள் இடம்பெறுகின்றன என அவர் குறிப்பிட்டுள்ளார்.

உயிர்த்தஞாயிறு தாக்குதல்கள் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகளின் அடிப்படையில்தேசிய பாதுகாப்பிற்கு அவசியம் என்ற அடிப்படையிலேயே இந்த யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. சம்பந்தப்பட்ட சகல தரப்புடனும் அரசாங்கம் பரந்துபட்ட கலந்துரையாடல்களை மேற்கொள்ளும்,பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதற்கு அவசியமானநேரம் எடுக்கப்படும் கருத்தொருமைப்பாடு எட்டப்படும்.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *