தமிழர்களுக்கு ஆதரவாக இந்தியா இருக்கும் – பிரதமர் மோடி

தமிழர்களுக்கு ஆதரவாக இந்தியா இருக்கும் – பிரதமர் மோடி

இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் (யு.என்.எச்.ஆர்.சி) சமர்ப்பிக்கப்பட்டுள்ள தீர்மானத்தை ஆதரிக்க வேண்டுமென இந்திய மத்திய அரசை அதிமுக வலியுறுத்தி கேட்டுக் கொண்டுள்ளது.

இது இலங்கையில் அமைதியை நிலைநாட்டுவதற்கான இந்தியாவின் தார்மீக கடமை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அதிமுக எம்.பி. தம்பித்துரை நாடாளுமன்றத்தில் பேசும்போது கூறியதாவது:-

ஐ.நா. மனித உரிமை மனித உரிமை கவுன்சிலில் தமிழர்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டை இந்தியா எடுக்க வேண்டும். மனித உரிமை மீறல், போர்க்குற்ற தீர்மானத்தில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக இந்தியா வாக்களிக்க வேண்டும். இலங்கை அரசுக்கு எதிரான தீர்மானத்துக்கு ஆதரவாக இந்தியா வாக்களிக்க வேண்டும்.

இலங்கையில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு ஆதரவாக இந்தியா இருக்கும் என பிரதமர் மோடி தமிழகம் வந்தபோது கூறினார். தற்போது அதை செய்ய வேண்டும் என்று தம்பித்துரை தெரிவித்தார்

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *