ரஷியாவில் போர் விமானத்தில் இருந்து தரையில் விழுந்து 3 விமானிகள் பலி

ரஷியாவில் போர் விமானத்தில் இருந்து தரையில் விழுந்து 3 விமானிகள் பலி

ரஷிய தலைநகர் மாஸ்கோவில் இருந்து 150 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கலுகா பிராந்தியத்தில் விமானப்படை தளம் உள்ளது. இங்கிருந்து நேற்று காலை, ஒலியை விட வேகமாக செல்லும் இரட்டை என்ஜின் கொண்ட டியூ-22எம்3 ரக குண்டு வீச்சு விமானம் வழக்கமான பயிற்சிக்காக புறப்பட தயாராக இருந்தது. விமானத்தில் விமானிகள் 3 பேர் புறப்படுவதற்கான ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்தனர்.

அப்போது சற்றும் எதிர்பாராதவிதமாக, விபத்து காலங்களில் விமானிகளை தானாக விமானத்தில் இருந்து வெளியேற்றும் அமைப்பு தவறுதலாக செயல்பட்டு 3 விமானிகளையும் வெளியேற்றியது.இதில் 3 பேரும் விமானத்திலிருந்து தரையில் விழுந்ததில் அவர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டது.‌ அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் கொண்டு செல்லப்பட்டனர். எனினும் சிகிச்சை பலனின்றி 3 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *