சூயஸ் கால்வாயின் குறுக்கே சிக்கிக்கொண்ட சரக்கு கப்பல்

சூயஸ் கால்வாயின் குறுக்கே சிக்கிக்கொண்ட சரக்கு கப்பல்

உலகின் மிக முக்கிய கடல் வர்த்தகப் பாதையான சூயஸ் கால்வாயில், எவர்கிவன் என்ற வணிகக் கப்பல் குறுக்கே சிக்கிக்கொண்டது. கால்வாயின் இரண்டு பக்க கரைகளின் சுவர்களிலும் மோதியபடி, பக்கவாட்டில் சிக்கிக்கொண்ட இந்த கப்பலால், அந்த பாதையில் ஒட்டுமொத்த கப்பல் போக்குவரத்தும் தடைபட்டது.
சீனாவிலிருந்து நூற்றுக்கணக்கான கன்டெய்னர்களுடன் புறப்பட்ட எவர்கிவன் கப்பல், மலேசியா வழியாக பயணித்து நேற்று முன்தினம் இரவு எகிப்திலுள்ள சூயஸ் கால்வாயை வந்தடைந்தது. நேற்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 7.40 மணியளவில் அங்கிருந்து கிளம்யிய எவர்கிவன், கால்வாய் வழியாக நெதர்லாந்தின் ரோட்டர்டாமுக்கு சென்றுகொண்டிருந்தது. அப்போது, திடீரென்று வீசிய பலத்த காற்றால் கப்பல் கட்டுப்பாட்டை இழந்து, முன்பக்கம் கால்வாயின் வடக்குபக்க சுவற்றின் மீது மோதியது. அடுத்தகணமே கப்பலின் பின்பக்கம் மேற்கு திசையில் இழுத்து தள்ளப்பட்டு மற்றொருபக்க சுவரில் மோதி நின்றது.

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *