ஜம்மு-காஷ்மீர்: நகராட்சி அலுவலகம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்.

ஜம்மு-காஷ்மீர்: நகராட்சி அலுவலகம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்.

ஜம்மு- காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா சோபார் என்ற இடத்தில் நகராட்சி அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகம் மீது இன்று அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இதில் கவுன்சிலர் ஒருவர், போலீஸ் அதிகாரி ஒருவர் என இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஒரு கவுன்சிலர் காயம் அடைந்துள்ளார்.
இந்த சம்பவம் இன்று காலை நடைபெற்றுள்ளது. சம்பவம் நடைபெற்ற இடத் ஜம்மு-காஷ்மீர் போலீசார் சுற்றி வளைத்துள்ளனர். இது பயங்கரவாத தாக்குதல் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
அனைத்து ஜம்மு-காஷ்மீர் பஞ்சாயத்து மாநாடு அமைப்பின் தலைவர் ஷபிக் மிர் ‘‘நாங்கள் மூன்று அடுக்கு பஞ்சாயத்து தேர்தலை நடத்தி முடித்துவிட்டோம். மத்திய அரசு எங்களை பாதுகாக்க தவறிவிட்டது’’ எனக் குற்றம்சாட்டினார்.

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *