ஓமனில் 796 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஓமனில் 796 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஓமனில் நேற்று மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனை முடிவுகளில் 796 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் ஓமனில் கொரோனாவால் பாதிக்கபட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு லட்சத்து 56 ஆயிரத்து 883 ஆக அதிகரித்துள்ளது.

இதில் நேற்று மட்டும் 524 பேர் குணமடைந்து தங்கள் வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். இதனால் ஓமன் நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு லட்சத்து 42 ஆயிரத்து 944 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 91 சதவீதமாக இருந்து வருகிறது.

கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக நேற்று ஒருவர் உயிரிழந்தார். இதன் மூலம் ஓமனில் கொரோனாவுக்கு பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 1,662 ஆக அதிகரித்துள்ளது. தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டு உடல்நலக்குறைவால் 161 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், பொதுமக்கள் முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியை முறையாக கடைப்பிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *