மாடுகளை இறைச்சிக்காக வெட்டுவது குறித்த தடை.

மாடுகளை இறைச்சிக்காக வெட்டுவது குறித்த தடை.

மாடுகளை இறைச்சிக்காக வெட்டுவதனை இலங்கையில் தடை செய்வது குறித்த புதிய சட்டமொன்றை அறிமுகம் செய்வதற்கான சட்ட வரைவு குறித்து சட்ட மா அதிபருடன் கலந்தாலோசிக்கப்பட்டு வருகிறது. எதிர்வரும் சில மாதங்களில் இந்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.இறைச்சிக்காக மாடுகளை வெட்டுவது தடை செய்யப்பட்ட போதிலும் மாட்டிறைச்சி இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்படும்.

இறைச்சிக்காக மாடுகளை வெட்டுவது தடை செய்வதன் மூலம் பாற்பண்ணையாளர்கள் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும்.வயது முதிர்ந்த மாடுகளை ஏற்றுமதி செய்யும் திட்டம் உள்ளது. இறைச்சிக்காக மாடுகளை வெட்டுவதனை தொழிலாளக் கொண்டவர்களுக்கு இந்தத் தடையினால் ஏற்படக்கூடிய பொருளாதார பாதிப்புக்களுக்கு எவ்வாறு தீர்வு வழங்குவது என்பது குறித்து இன்னும் யோசனைகள் முன்வைக்கப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.இது குறித்து ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *