இராயப்பு ஜோசப் ஆண்டகை அவர்கள் நஞ்சூட்டப்பட்டரா?

இராயப்பு ஜோசப் ஆண்டகை அவர்கள் நஞ்சூட்டப்பட்டரா?

கடந்த காலத்தில் வணக்கத்துக்கரிய இராயப்பு ஜோசப் ஆண்டகை அவர்கள் நஞ்சூட்டப்பட்டார் என வெளியான தகவல்கள் உண்மைக்கு புறம்பானது என மன்னார் மறைமாவட்ட கத்தோலிக்க குருவானவரும், தற்போது சுவிஸிலே தமிழ் கத்தேலிக்க ஆன்மீக பணியகத்தின் இயக்குநராகவும் பணியாற்றும் அருட்தந்தை டக்ளஸ் மில்டன் லோகு தெரிவித்தார்.

எமது ஊடகத்தின் ‘நெற்றிக்கு நேர்’ நிகழ்ச்சியில் காணொளி வழியாக கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார்.மன்னார் மறை மாவட்டத்தின் ஓய்வு நிலை ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை அவர்கள் காலம்சென்ற செய்தி காலை வேளையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.இந்த நிலையில் அவரின் அருகில் இருந்த அருட்தந்தை டக்ளஸ் மில்டன் லோகு, இராயப்பு ஆண்டகையின் நினைவுகளை பகிர்ந்து கொண்டார்.

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *