சர்வதேச நீதிமன்றத்தின் முன் முப்படையினரையும் கைது செய்து முன்நிறுத்த திட்டம்.

சர்வதேச நீதிமன்றத்தின் முன் முப்படையினரையும் கைது செய்து முன்நிறுத்த திட்டம்.

முப்படையினரையும் கைதுசெய்து சர்வதேச நீதிமன்றத்தின் முன் நிறுத்துவதற்கான திட்டம் காணப்படுகின்றது என என கல்வியமைச்சர் ஜிஎல்பீரிஸ் தெரிவித்துள்ளார்.கண்டியில் ஊடகவியலாளர்களுக்கு இதனை தெரிவித்துள்ள அமைச்சர் பொதுமக்கள் இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து விளங்கிக்கொள்ளவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

சட்டங்களை உருவாக்குவது அரசமைப்பில் திருத்தங்களை மேற்கொள்வது முப்படையினரினதும் நியமனங்களை மேற்கொள்வது போன்றவற்றை முன்னெடுப்பதன் மூலம் ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையும் ஆணையாளரும் இலங்கையின் உள்விவகாரங்களில் தலையிடுவதற்கு அனுமதிக்கவேண்டுமா என கேள்வி எழுப்பியுள்ள அமைச்சர் நாடாளுமன்றத்தி;ன் பங்களிப்பு என்னவெனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

சமீபத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் படி இலங்கையில் மனித உரிமை மீறல்கள் இடம்பெறும் என மனித உரிமை கருதுகின்றது,என தெரிவித்துள்ள அமைச்சர் 12.8 மில்லியன் அமெரிக்க டொலர்களை செலவழித்து முப்படையினரையும் கைதுசெய்து சர்வதேச நீதிமன்றத்தின் முன் நிறுத்துவதற்கான திட்டம் காணப்படுகின்றது எனவும் தெரிவித்துள்ளார்.

இலங்கையை பயன்படுத்தி சில நாடுகள் தங்கள் நிகழ்ச்சிநிரலை பூர்த்தி செய்ய முயல்வதற்கு எதிராக கட்சி பேதங்களை மறந்து விட்டு அனைத்து தரப்பினரும் ஒன்றுபடவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.ஐ.நா.விலுள்ள சில நாடுகளின் தலைவர்கள், தேர்தல்களுக்கு புலம்பெயர்ந்தோரின் ஆதரவை வெளிப்படையாக கோரியுள்ளனர்.இந்நிலையில் எந்தவொரு அரசியல் கட்சியும் இத்தகைய நடவடிக்கைகளுக்கு எதிராக குரல் எழுப்பவில்லை என்றால், அது நாட்டுக்கு எதிரான துரோகத்தின் வடிவமாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *