18 வயதுக்கு மேல் உள்ள அனைவருக்கும் தடுப்பூசி

18 வயதுக்கு மேல் உள்ள அனைவருக்கும் தடுப்பூசி

இந்திய முழுவதும் கொரோனா 2-வது அலை ஏற்பட்டு வேகமாக பரவி வருகிறது. தினசரி நோய் பரவல் 1 லட்சத்தை தாண்டி இருக்கிறது.இந்தநிலையில் நோயை கட்டுப்படுத்துவது தொடர்பாக இந்திய மருத்துவ சங்கம் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளது.கொரோனா நோய் வேகமாக பரவி வரும் இந்த சூழ்நிலையில் அதை கட்டுப்படுத்த 2 வழிகள்தான் உள்ளன. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகமாக்க வேண்டும். கொரோனா தடுப்பூசி போடுவதை கட்டாயமாக்க வேண்டும்.

அவ்வாறு செய்தால் தான் கொரோனா நோய் மேலும் பரவாமல் கட்டுக்குள் கொண்டு வர முடியும்.தற்போதுவரை 7 கோடியே 91 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அதில் 6 கோடியே 81 லட்சம் பேருக்கு முதல்கட்ட தடுப்பூசியும், 1 கோடியே 5 லட்சம் பேருக்கு 2-வது தடுப்பூசியும் போடப்பட்டுள்ளன.2-வது அலை நோய் பரவல் மிக வேகமாக அதிகரித்து வரும் இந்த சூழ்நிலையில் தடுப்பூசி போடுவதை போர்க்கால அடிப்படையில் இன்னும் வேகப்படுத்த வேண்டும்.

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *