அழுத்தம் தாங்கமுடியாது பதவி விலகிய ஆளும் கட்சியின் முக்கிய உறுப்பினர்.

அழுத்தம் தாங்கமுடியாது பதவி விலகிய ஆளும் கட்சியின் முக்கிய உறுப்பினர்.

பொதுஜனபெரமுனவின் நிர்வாக செயலாளர் ரேணுகா பெரேரா தாம் வகித்து வந்த தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் பதவியிலிருந்து இராஜினாமா செய்துள்ளார்.துறைசார் அமைச்சரின் அழுத்தம் காரணமாக இந்த தீர்மானத்தை தாம் மேற்கொண்டதாக ரேணுகா பெரேரா பிரதமருக்கு அனுப்பியுள்ள இராஜினாமா கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் பதில் பொது முகாமையாளர் பதவிக்கு கணக்காய்வின் போது குற்றவாளியாகக் காணப்பட்ட ஒருவரை நியமிக்குமாறு தொடர்ச்சியாக அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டதாகவும் தாம் அதற்கு இணங்கவில்லை எனவும் ரேணுகா பெரேரா கூறியுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் பிரதமர் மற்றும் செயலாளருக்கு அறிவித்ததாகவும் அவரது இராஜினாமா கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஊழலில் ஈடுபட்ட அதிகாரிகளுடன் பணியாற்ற முடியாது என தெரிவித்து தாம் இராஜினாமா செய்ததாகவும் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் ரேணுகா பெரேரா தெரிவித்துள்ளார்.இந்த இராஜினாமா கடிதத்தின் பிரதிகள் ஜனாதிபதி, ஜனாதிபதியின் செயலாளர், அமைச்சின் செயலாளர் மற்றும் பசில் ராஜபக்ஸ ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *